"செய்ற தப்பையும் செஞ்சிட்டு எகத்தாளம்.."அரசு அதிகாரி கன்னத்தில் பெண் பளார் - அதிர்ச்சி காட்சிகள்

x

பெங்களூரு அருகே சட்டவிரோத மின் இணைப்பை துண்டித்த மின்வாரிய ஊழியரை, ஓங்கி அறைந்த பெண் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆனேக்கல் தாலுகா சந்தாபுர பகுதியை சேர்ந்த ரூபாம்மா என்பவர், புதிதாக கட்டிய வீட்டிற்கு, பழைய வீட்டின் மின் இணைப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளார். இதையறிந்து, மின் இணைப்பை மின்வாரிய ஊழியர் துண்டித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தையால் ரூபாம்மா, திட்டியதால், மேலதிகாரியை வரவழைத்துள்ளார். மின்வாரிய பொறியாளர் அபராதம் விதிக்க முற்பட்ட போது, திடீரென மின்வாரிய ஊழியரை ரூபாம்மா ஓங்கி அறைந்தார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதும், தலைமறைவான ரூபாம்மாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்