500 கிலோ காகிகத்தில் விநாயகர் சிலை

x

புதுச்சேரியில் நுண்கலை ஆசிரியர் ஒருவர், 500 கிலோ காகிதங்களைக் கொண்டு 15 அடி உயர காகித விநாயகர் சிலையை உருவாக்கி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக பழைய காகிதங்களைக் கொண்டு, பல்வேறு சிற்பங்களை செய்து வரும் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன், விநாயகர் சதுர்த்திக்காக வித்தியாசமான சிலையை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக, கடந்த 4 மாதங்களாக பல்வேறு வீடுகளில் இருந்து பெறப்பட்ட பழைய காகிதங்களைக் கொண்டு 15 அடி உயர காகித விநாயகரை தயாரித்து வருகிறார். 500 கிலோ பழைய காகிதம், 200 கிலோவுக்கும் மேற்பட்ட பசைகளைக் கொண்டு உருவாக்கி வரும் இந்த விநாயகர் சிலையை, விநாயகர் சதுர்த்தி அன்று தனது பகுதியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்