பட்டப்பகலில் நண்பன் வெட்டிக்கொலை.... கேலி செய்ததை கண்டித்ததால் பயங்கரம்...

x
  • சிதம்பரம்
  • பட்டப்பகலில் நண்பன் வெட்டிக்கொலை....
  • கேலி செய்ததை கண்டித்ததால் பயங்கரம்...
  • அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்த தொழிலாளி...
  • கேலி செய்ததை கண்டித்ததால் நண்பர்கள் வெறிச்செயல்...
  • நம்மோட ரகசியங்களை எல்லாம் நாம நெருங்கமான நண்பர்கள்கிட்ட தான் சொல்லுவோம். அப்படி இங்க ஒருத்தர் சொன்ன ரகசியம் கடைசியில அவரோட உயிருக்கு உலை வைச்சிருக்கு.
  • சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் பகுதி...
  • திருவிழா, உற்சவம், சாமி தரிசனம் என ஆன்மீக இடமாக விளங்கிய இந்த சாலை அன்று மயான பூமியாக காட்சியளித்தது.
  • பொது மக்கள் அச்சத்துடன் கூடி நின்று வேடிக்கை பார்க்க, பச்சை துணியால் மூடப்பட்டு கிடந்தது ஒரு ஆணின் சடலம்.
  • நடந்திருப்பது ஒரு படுகொலை...சற்று முன் இட்லி சாப்பிட வந்தவரை சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறது ஒரு மர்ம கும்பல்.
  • கொல்லப்பட்டவர் சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்த ஒன்றிராமம் என்கிற ராமு. 35 வயதான இவர் ஒரு கூலித்தொழிலாளி. வேலை முடிந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து இந்த பகுதியில் மது குடிப்பது ராமுவின் வழக்கம்.
  • இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று காலை, காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு கையேந்தி பவனில் டிபன் சாப்பிட வந்திருக்கிறார். அப்போது ராமுவை சுற்றி வலைத்த இரண்டு பேர், அரிவாளால் கொடுரமாக வெட்டி கொலை செய்திருக்கிறார்கள்.
  • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் மிதந்த ராமுவின் சடலத்தை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
  • கொலைக்கான காரணம் என்ன...? முன்பகையா...? அல்லது கள்ளக்காதலா...? என அக்கம்பக்கத்தில் விசாரித்த போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி உள்ளனர்.
  • அந்த சமயத்தில் தான் ராமுவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சத்தியந்திரன் என்ற கஜா, கணேசன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்கள்.
  • அவர்களிடம் நடந்த விசாரனையில் தான் கொலைக்கான காரணம் ஒரு கள்ளக்காதல் கேலி பேச்சு என்று தெரிந்திருக்கிறது.
  • கொல்லப்பட்ட ராமு, கைது செய்யப்பட்ட கஜா, கணேசன் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். குடித்து கும்மாளம் அடிப்பது, அட்டி போட்டு ரோட்டில் செல்லும் பெண்களை கேலி செய்வது தான் இவர்களது பிரதான வேலை.
  • குடியில் மட்டுமல்ல வாழ்க்கையில் நடக்கும் அனைத்து ரகசியங்களையும் ஒருவருக்கொருவர் ஒலிவுமறைவில்லாமல் பேசிக்கொள்வார்களாம்.
  • அப்படி ராமு கூறிய ஒரு ரகசியம் தான் இன்று அவரின் உயிரை பறித்திருக்கிறது.
  • ஆம்....35 வயதாகியும் ராமு திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் ராமுவுக்கு, அவரின் அண்ணியுடன் இருந்த கள்ளக்காதல். வெளியுலகிற்கு தெரியாமல் இருவரும் பலகாலமாக தகாத உறவில் இருந்து வந்துள்ளனர்.
  • சரி.... நண்பர்கள் தானே என அண்ணியுடனான கள்ளக்காதல் விவகாரத்தை பற்றி கஜாவிடமும் கணேசனிடமும் கூறி இருக்கிறார் ராமு.அந்த ஒரு ரகசியத்தை வைத்து கொண்டு, அன்று முதல் கஜாவும், கணேசனும் ராமுவை கேலி செய்து வந்துள்ளனர்.
  • அதை பொருத்துக்கொள்ள முடியாத ராமு, பலமுறை நண்பர்களை கண்டித்திருக்கிறார்.ஆனாலும் இருவரும் கேட்பதாயில்லை. கேலி கிண்டலை தொடர்ந்திருக்கிறார்கள்.
  • இதனால் கடுப்பான ராமு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மது போதையில் நண்பர்கள் இருவரையும் அடித்ததாக தெரிகிறது. என்னதான் நண்பனாக இருந்தாலும் பொதுவெளியில் வைத்து அடித்தது, காஜாவுக்கும் கணேசனுக்கும் ஆத்திரத்தை கிளப்பி இருக்கிறது.
  • இரவு முழுதும் மது போதையில், நண்பன் அடித்ததை நினைத்து கொதித்து போயிருக்கிறார்கள். அந்த கொதிப்புகள் கொலைவெறியாக மாற, மறு நாள் பொழுது விடிந்ததும் ஆயுதங்களுடன் ராமுவை அடையாளம் தெரியாமல் வெட்டி கொன்றது விசாரனையில் வெளிவந்திருக்கிறது.
  • இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கஜா மற்றும் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்