ஹோட்டலில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி

x

ஹரியானாவில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா உணவகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் மாடல் அழகியான 27 வயதாகும் திவ்யா பஹுஜா, குருகிராமில் உள்ள தங்கும் வசதியுடன் கூடிய உணவகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக, சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் திவ்யாவின் உடலை இருவர் இழுத்துச் சென்று காரில் ஏற்றிச் செல்வது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக அபிஜித், ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்