"திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருபவர்களுக்கு.." - அறங்காவலர் குழு அதிரடி உத்தரவு..

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் பேசிய அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகரன் ரெட்டி, ஏழுமலையான் கோயிலுக்கு முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், வேறு நபர்களுடன் அடிக்கடி சாமி தரிசனம் செய்ய வருவதாகவும், இது நடைமுறைக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார். முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் வந்து தரிசனம் செய்யலாம் என்றும், வேறு நபர்களுடன் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்