திடீரென பற்றிய பட்டாசு கடை.. கண்முன்னே சாம்பலான பைக்குகள் - நொடி பொழுதில் தப்பிய 2 உயிர்

x

கேரளாவில், பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரு இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. திருவனந்தபுரம் அருகே தமலம் பகுதியில் அமைக்கப்பட்ட பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. கடைக்காரரும், வாடிக்கையாளர்களும் சுதாரித்துக் கொண்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே, விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன...


Next Story

மேலும் செய்திகள்