வெடித்து சிதறிய கட்டிடம்.. துடிதுடித்து பலியான 8 பேர் - அலறியடித்து ஒடிய மக்கள்

x

மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிப்பின் அதிர்வு, 20 கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. வெடிச்சத்தத்தை கேட்டு அச்சமடைந்த மக்கள், அலறியடித்து ஓடினர். வெடி விபத்தை தொடர்ந்து தீ மூண்டதால், ஆலையை மட்டுமின்றி, சுற்றியுள்ள கட்டிடங்களையும் சூழ்ந்தது.

அடர் புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளியாகின. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 87 பேர் காயமடைந்தனர். லேசான காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் போபால் மற்றும் இந்தூருக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்