அதிகாலையில் பற்றி எறிந்த தீ .. தரைமட்டமான 15 வீடுகள்

x

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை அருகே குடிசைப்பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மும்பை கோவண்டி ஆதர்ஷ் நகர் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளன. இங்கு இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 10 முதல் 15 குடிசை வீடுகள் சேதமடைந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்