பட்டாசு குடோனில் தீ விபத்து...உடல் சிதைந்த நிலையில் 3பேர் ..போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் உண்மை

x

கர்நாடகா மாநிலம், ஆலதகட்டி கிராமத்தில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில், நேற்று பிற்பகல் 12 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் பட்டாசுகள் எரிந்து சாம்பலானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சம்பவ இடத்திலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குடோனுக்கு அருகில் உள்ள கட்டடத்தில் வெல்டிங் வேலை பார்த்ததில், அதில் இருந்து தீப்பொறி வந்ததால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்