நாப்கின் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து.. ஹரியானாவில் பரபரப்பு

x

ஹரியானா மாநிலம் ரிவாரி மாவட்டத்தில் உள்ள நாப்கின் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீ கொழுந்துவிட்டு எரிந்து புகைமூட்டம் நிலவியது. விபத்தில் உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்