உச்ச நீதிமன்றம் சென்ற FIR - சந்திரபாபு நாயுடுக்கு இன்று முக்கிய நாள்...

x

திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் (செப்.27) விசாரிக்கிறது. தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மீதான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்