"வயநாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் -வெளியான அதிர்ச்சி காரணம்

x

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களில் காட்டு யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். புல்பள்ளி பகுதியைச் சேர்ந்த பால் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வயநாடுவாழ் மக்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வனத்துறை வாகனத்திற்கு மலர் வளையம் வைத்தும், வாகனத்தின் டயர் காற்றை திறந்து விட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்