"நாளை வேட்பு மனு தாக்கல்" - ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்

x

நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பறிமுதல் செய்யப்படும் பணம் பற்றிய தகவல்கள், அனைத்து அலுவலர்களுக்கும் சென்று விடும் என்று கூறினார். பணம் தொடர்பான ஆவணங்கள் இருந்தால் அந்த பணம் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும், இந்த நேரத்தில் பொது மக்களும் விழிப்புணர்வாக பணம் தொடர்பான ஆவணத்தோடு பணத்தை எடுத்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்