உள்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு

x

மேற்கு வங்கத்தில் கூடுதலாக ஆயுதப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மக்களவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் 55 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர், 45 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தால் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்பாக மேற்கு வங்கத்தில் மேலும் கூடுதலாக 100 கம்பெனி மத்திய ஆயுதப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நியாயமான முறையில் தேர்தலை நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்