பிரதமர் மோடி குறித்து அவதூறு - பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

x

பிரதமர் மோடி குறித்து அவதூறு - பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...மத்தியப் பிரதேச மாநிலம் சான்வெர் சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் மோடி குறித்து தவறான அறிக்கைகளை அவர் வெளியிட்டதாக கூறி, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நவம்பர் 16ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு, தேர்தல் ஆணையம் சார்பில், பிரியங்கா காந்திக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக, ஆம் ஆத்மி கட்சி்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்