சினிமா பட பாணியில் ஏர்போர்ட்டில் பல கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல்.. அலேக்காக தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்

x

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு கடத்தி வரப்பட்ட 41 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணியிடம் இருந்த உடைமைகளை சோதனை நடத்தியபோது, பையில் சுமார் 6 கிலோ எடையுள்ள ஹெராயினை பதுக்கி கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்தப் பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்