நெருங்கும் தீபாவளி.. கடலென காட்சியளிக்கும் காந்தி வீதி.. திரும்பும் இடமெல்லாம் கண்காணிப்பு கேமரா..

x
  • வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் அதிக அளவில் கடைகள் உள்ள நேரு வீதி, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் புதிய ஆடைகளை வாங்க குவிந்துள்ளனர் இது தொடர்பான கூடுதல் தகவல்களை தருகிறார் எமது செய்தியாளர் எழில்குமார்.
  • புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியின் நகரப் பகுதிகளான அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட சாலைகளில் உள்ள கடைகளில் புதிய ஆடை வாங்க பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர்.
  • பெரியவர்கள் பெண்கள் குழந்தைகள் ஆண்கள் சிறுவர் என அனைவருக்கும் தேவையான உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க பொதுமக்கள் நீர் வீதி மற்றும் காந்தி வீதியில் குவிந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்.
  • போக்குவரத்து நெரிசல் காரணம் மிஷன் வீதி மற்றும் காந்தி வீதியில் கார் உள்ளிட்ட கனரா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • நேரு வீதி காந்தி மீது உள்ளிட்ட வீதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
  • போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • மேலும் நகரப் பகுதியில் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
  • இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்