டெல்லி ஜி-20 உச்சி மாநாடு.! - சீனா திடீர் அறிவிப்பு | G20

x

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Vovt

இந்தியாவின் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் தன்னால் பங்கேற்க இயலாது என பிரதமர் மோடியிடம், ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்