கெஜ்ரிவால் கைது.. AAP எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் டெல்லி | Arvind Kejriwal | Delhi CM

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தே அரசை நடத்துவார் என, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், கைது கண்டித்து ஆம் ஆத்மி தொண்டர்களும், நிர்வாகிகளும், அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் அமைந்திருக்கும் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், தொண்டர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, இன்று பாஜக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் எனவும், சிறையில் இருந்தபடியே அரசை நடத்துவார் எனவும் அக்கட்சி கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்