வீட்டை அடமானம் வைத்து மகளுக்கு ஜாம் ஜாம்னு திருமணம்..முடிந்தபின் அம்மாவை கொன்று உயிரை விட்ட அப்பா..

x

கர்நாடாகா மாநிலத்தில் குடியிருந்த வீடு ஏலத்துக்கு வந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Daughter got married by mortgaging the house.கர்நாடகா மாநில எல்லையான சர்ஜாபுரத்தில் வசித்து வந்த தம்பதி வெங்கடசாமி மற்றும் லட்சுமம்மா . கூலித் தொழிலாளியான வெங்கடசாமி சமீபத்தில் தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைத்த நிலையில், திருமண செலவுக்காக வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போகவே, வீட்டை வங்கி அதிகாரிகள் ஏலத்தில் விட்டு இருக்கின்றனர். இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடசாமி அறிவாளால் மனைவியை வெட்டி கொன்று, தானும் விஷமறிந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்