"எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை..?" - நீதிமன்றம் உத்தரவு

x

எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை..?" - நீதிமன்றம் உத்தரவு

வாலி திரைப்படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வர மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vovt

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றுள்ளார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் வழக்கு தொடர்பாக நான்காவது மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி முன் எஸ்.ஜே.சூர்யா சாட்சியமளித்தார். குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் விசாரணைக்கு எஸ்.ஜே.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த குறுக்கு விசாரணைக்கான அவகாசம் முடிந்தது. இதனையடுத்து, அவரிடம் விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்