போலி சுங்கச்சாவடி அமைத்து கோடிக்கணக்கில் சுருட்டல்

x

போலி சுங்கச்சாவடி அமைத்து கோடிக்கணக்கில் சுருட்டல்

குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை ஆண்டுகளாக போலி சுங்கச்சாவடி நடத்தி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் தனியார் நிலத்தில் சாலை அமைத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போலி சுங்கச்சாவடி நடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாமான்பூர் - கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், சட்டவிரோதமாக சுங்கச்சாவடி அமைத்து கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பொதுமக்கள் மட்டுமின்றி, போலீசார், அரசு அதிகாரிகளும் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்