சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்... பிரபல கிரிக்கெட் வீரர் எடுத்த முடிவு

x

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இளம்பெண் சிறுமியாக இருந்தபோது சந்தீப் லமிச்சேன் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சந்தீப் லமிச்சேனை குற்றவாளி என அறிவித்த நேபாள நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வழக்கு நீடிப்பதால் லமிச்சேன் சிறையில் இருந்து வெளியில் இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து இருப்பதாக சந்தீப் லமிச்சேனின் வழக்கறிஞர் சரோஜ் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்