நண்பன் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை - டெல்லி CM போட்ட உத்தரவு

x

டெல்லியில், சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில், அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர் ஊழியர் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உயிரிழந்த நண்பரின் 18 வயதுக்குட்பட்ட மகளிடம் அத்துமீறி, பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. மனச்சோர்வு காரணமாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நடந்த சம்பவங்களை மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிகாரியை சஸ்பெண்ட் செய்து, தலைமைச் செயலாளரிடம் அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்