"கமிஷன் காங்., கட்டிங் பாஜக.." - மீண்டும் அதிர வைக்கும் 40% கமிஷன் மிரட்டும் அதிகாரிகள்; பகிரங்க அறிவிப்பு

x

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தலைவர் கெம்பண்ணா, கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் என்ற பாரம்பரியம் முடிவுக்கு வராது போலிருக்கிறது என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியிலும் கமிஷன் இல்லாமல் எந்தப் பணியும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர், இம்முறை எம்.எல்.ஏக்களோ, அமைச்சர்களோ கமிஷன் கேட்கவில்லை மாறாக, அதிகாரிகள் கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கொடுக்கவில்லை என்றால் வேலை நடக்காது என அதிகாரிகளே மிரட்டல் விடுப்பதாகவும், போலீசில் புகார்களிக்களாம் என்றால் தங்கள் மீதான மான நஷ்ட வழக்கை அதிகரித்துக் கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் கூறினார். இதனிடையே, கமிஷன் விவகாரத்தை சுட்டிக்காட்டி, காங்கிரசின் நேர்மை எங்கே போனது என சித்தராமையா அரசுக்கு பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்