ரூ.43 கோடி மதிப்பில் கொக்கைன், ஹெராயின் - பின்னணியில்...

x

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில், 43 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக போதைப் பொருட்களை கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கரிப்பூர் விமான நிலையத்தில் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜீவ்குமார் என்ற இளைஞரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த இளைஞர் 3 ஆயிரத்து 490 கிராம் கொக்கைன் மற்றும் ஆயிரத்து 296 கிராம் ஹெராயின் போதைப்பொருட்களை மறைத்து வைத்து கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த விமானநிலைய அதிகாரிகள், ராஜீவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 43 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்