புதுச்சேரியில் பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி.! | Pondicherry

x

இத்திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்காக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் அட்டவணை மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளுக்கு ஈடாக, தலா ஆயிரம் வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 628 நபர்கள் பயனடைவார்கள். இதற்காக மொத்தம் 12 கோடியே 76 லட்ச ரூபாய்

செலவிடப்படுகிறது. பயனாளிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்