கேரளாவில் செண்டை மேளம் முழங்க நடந்த கலாச்சார பேரணி...ஆசையாக கண்டுகளித்த முதல்வர் பினராயி விஜயன்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், திருவோணம் பண்டிகையை முன்னிட்டு, கலாச்சார பேரணி நடைபெற்றது. கேரள மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும், சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள் பேரணியில் இடம்பெற்றன. மேலும் கேரள அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான கலை வடிவங்களும் அலங்கார ஊர்திகளில் இடம்பெற்றன. பொது நூலக சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்று பேரணியை கண்டுரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்