சந்திரபாபு நாயுடு மகனுக்கு CID போலீசார் வைத்த செக்

x

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து, அவரது மகனிடமும் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திராவில், கடந்த 2015ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில், திறன் மேம்பாட்டுக்கழக ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமராவதி நகரில் உள்வட்ட சாலை அமைக்கும் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அந்த முறைகேடுகளில் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ்க்கு தொடர்பு இருப்பதாகவும் ஆந்திர சிஐடி போலீசார் குற்றம் சாட்டினர். இதுகுறித்து விசாரிக்க குண்டூரில் உள்ள சிஐடி தலைமை அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், லோகேஷ் சிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மாலை வரை விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்