சிறையில் சந்திரபாபு நாயுடு... வெளியே மனைவி உண்ணாவிரத போராட்டம்

x

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து அவரது மனைவி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளார். அவரது கைதை கண்டித்து மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேச கட்சியினர் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜமுந்திரியில் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி மற்றும் அக்கட்சியின் பெண் தொண்டர்கள், மேடை அமைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்