சிறையில் சந்திரபாபு நாயுடு.. வெளியில்`பவன் கல்யாண்' - "ஒரே அறிவிப்பு" ஆடிப்போன அரசியல் களம்

x

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், அடுத்து நடைபெற இருக்கும் தேர்தலில் ஜனசேனா கட்சி, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். தங்கள் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட விருப்பமுள்ள கட்சிகளையும் அரவணைத்து செல்வோம் என்று அவர் கூறினார். பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, என்.டி.ஏ கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்