"எப்படி இருக்கு லே லடாக்?" ராகுலிடம் கேட்ட மத்திய அமைச்சர்

x

ஜம்மு - காஷ்மீரில், 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, லே மற்றும் லடாக்கில் ஏற்பட்ட முன்னேற்றங்களை காண, ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார். லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி சென்றதை மேற்கோள்காட்டிய பிரகலாத் ஜோஷி, அவரது சாலை பயணத்தின் காட்சிகளை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், லே மற்றும் லடாக்கில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கிய பிறகு ஏற்பட்ட வளர்ச்சி குறித்து பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என, ராகுல் காந்தியிடம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்