லாரி டயரில் சிக்கி பலியான மாணவன்... "நான் தான் கொன்னுட்டேன்.." குற்றஉணர்சியில் விவசாயி செய்த விபரீதம் - அதிர வைக்கும் காட்சி

x

கர்நாடகாவில் தன்னால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த துக்கத்தில் விவசாயி ஒருவர் தன் உயிரையே மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா கண்டனகொல்லி கிராமத்தை சேர்ந்தவர் ககன். எம்.பி.ஏ. படித்து வந்த இவர், கடந்த 9-ந்தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஒரவநாடு கிராமத்தை சேர்ந்த தம்மையா என்பவரின் இருசக்கர வாகனம் மோதியதால், கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் க‌கன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தம்மையாவை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த தம்மையா, அந்த இளைஞர் பிழைப்பது கடினம்... வாழ வேண்டிய வயதில் தன்னால் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பி வந்துள்ளார். இதனிடையே, மைசூரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்ப‌ப்பட்ட க‌க‌ன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலறிந்து மனவேதனை அடைந்த தம்மையா, அங்கு உள்ள காபி தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னால் ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்