நடந்து சென்றவரை இடித்த பைக்.. நடுரோட்டில் புரண்டு விழுந்த பெண்கள்-பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் கண்ணூரில், கொலை முயற்சி வழக்கு குற்றவாளியை கைது செய்ய சென்ற காவல்துறையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை முயற்சி வழக்கில் ரோஷன் என்பவரை கைது செய்வதற்காக 2 எஸ்ஐ உட்பட 6 காவல்துறையினர் சென்றனர். அவர்களை பார்த்த ரோஷன் மேல்தளத்தில் உள்ள தந்தையின் அறையில் சென்று தாழிட்டுள்ளார். கதவை திறக்க போலீசார் முயன்றபோது, ரோஷனின் தந்தை பாபு உம்மன் தாமஸ் துப்பாக்கியால் 3 ரவுண்டு சுட்டார். அதிர்ஷ்டவசமாக இதில் காவலர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில், ரோஷன் தப்பியோடினார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய பாபு உம்மன் தாமஸை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்