இன்று தொடங்கும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் - தயாரான 39 லட்சம் மாணவர்கள்

x

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் இந்தத் தேர்வை, நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 20 ஆயிரம் பேரும், 12-ஆம் வகுப்பு பயின்று வரும் 10 ஆயிரம் பேரும் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வு 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 13-ஆம் தேதிவரையும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதிவரையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்