மின்னல் வேகத்தில் வந்த கார்.. லாரிக்கு அடியில் புகுந்த பயங்கரம் - நொடியில் பலியான 2 பேர்... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி பின்னால், வேகமாக வந்த கார் மோதிய விபத்தில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சூர்யாப்பேட்டை மாவட்டம் முகுந்தாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் வேகமாக கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் அடிப்பகுதியில் புகுந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்