லாரி மீது மோதிய கார்..உள்ளே சிக்கிய MLC ..நெடுஞ்சாலையில் கோர சம்பவம்.. ஆந்திராவில் பரபரப்பு..

x

ஆந்திர மேல் சபை உறுப்பினர் சந்திரசேகர் ரெட்டி, தனது உதவியாளர் உட்பட 5 பேருடன், விஜயவாடாவில் இருந்து நெல்லூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நெல்லூர் - விஜயவாடா இடையே கொடவலூர் என்ற இடத்தில் கார் சென்றபோது, முன்னால் பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் கார் நொறுங்கிய நிலையில், மேல் சபை உறுப்பினர் சந்திரசேகர் ரெட்டி காயமடைந்தார். அவரது உதவியாளர்

உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த உதவியாளரின் உடலை போலீசார் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்