திடீரென சாலையில் தகதகவென பற்றி எரித்த கார்!நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்... பதறவைக்கும் காட்சி!

x

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செராய் பகுதியில் இருந்து வரவூர் நோக்கி, 4 பேர் கொண்ட குடும்பம் காரில் பயணித்துள்ளனர். அப்போது காரில் இருந்து புகை வந்த நிலையில், காரை நிறுத்திவிட்டு நால்வரும் கீழே இறங்கினர். உடனடியாக கார் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், தீயணைப்புத்துறை வருவதற்கு முன்பே கார் முழுவதும் தீக்கிரையானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்