கண்முன்னே துடித்த அண்ணன் மகன்.. காப்பாற்ற சென்ற சித்தப்பாவும் மரணம்

x

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கண்ணஞ்சிரி பகுதியை சேர்ந்தவர் ஜெளஹர். 39 வயதான இவர், அவரது உறவினர்களுடன் அப்பகுதியிலுள்ள சாலியாற்றிற்கு சென்றுள்ளார். அப்போது, ஜெளஹரின் அண்ணன் மகனான முகமது நபான் என்ற 15 வயது சிறுவன், ஆற்றில் இறங்கி மீன் பிடித்த நிலையில், திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே, சிறுவனை காப்பாற்ற அவரது சித்தப்பாவும் நீருக்குள் குதித்த நிலையில், இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்