புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரி..தீ வைத்த மர்ம நபர்கள்..பறவைகளை பாதிக்கும் அபாயம்

x

கடலூர் எல்லையில் அமைந்துள்ள புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான பாகூர் ஏரியில் காய்ந்த நிலப்பரப்பில் மர்ம நபர்கள் விடியற்காலை தீ வைத்துச் சென்றதால், அப்பகுதியைச் சுற்றியுள்ள பறவை இனங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரியில் அரிய வகை பறவையினங்கள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில், இங்கு விடியற்காலை மர்ம நபர்கள் காய்ந்த செடிகளுக்கு தீ வைத்துள்ளனர். காற்றின் வேகத்தால் தீ பரவிய நிலையில், இனப்பெருக்கம் செய்வதற்காக வந்துள்ள பறவையினங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்