அலுவலகம் புகுந்து இருவரை வெட்டி கொன்ற தொழில் நண்பன்.. போலீசாரிடம் சொல்லி அலறவிட்டு ஓட்டம் - சுற்றி வளைத்து தொக்காக பிடித்த போலீசார்

x

சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், கர்நாடகாவில் அரங்கேற்றப்பட்ட இரட்டை கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு, கம்பர்பேட்டையில் வசித்து வரும் சுரேஷ் என்பவர், எண்டர்பிரைசஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் பத்ரிபிரசாத் என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுரேஷின் அலுவலகம் வந்த பத்ரிபிரசாத், சுரேஷூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த அவருடைய நண்பர் மேகேந்திராவையும் வெட்டிக் கொன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர், தானாகவே போலீசில் தகவல் தெரிவித்து பத்ரிபிரசாத் தப்பிச் சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை சம்பவத்தில், தப்பியோடிய பத்ரிபிரசாத்தை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்