பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரம் - வெளிவந்த குற்றவாளியின் புகைப்படம்

x

பெங்களூரு எச்.ஐ.எல் பகுதியில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே-இல்... கடந்த மார்ச் 1 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். விசாரணையில், தலையில் தொப்பியும்... முகக் கவசமும் அணிந்திருந்த நபர் ஒருவர் வெடிகுண்டை வைத்துவிட்டு பெங்களூரு மாநகர பேருந்தில் ஏறி செல்வது தெரியவர, அது தொடர்பான காட்சிகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்தான விசாரணையை கையிலெடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், குற்றவாளி பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட பெல்லாரி நகரில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்திற்குரிய நபர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த நிலையில், அவரின் நான்கு புகைப்படங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுபோன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், யாரேனும் தென்பட்டால் தகவல் தெரிவிக்கும் படி பொதுமக்களிடம் ஒத்துழைப்பு கோரியிருக்கும் அதிகாரிகள், குற்றவாளியை வலை வீசி தேடிவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்