வீரியம் எடுக்கும் பெங்களூர் உணவக குண்டுவெடிப்பு சம்பவம்.. வெளிவரும் முக்கிய பின்னணிகள்

x

பெங்களூர் ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் இருவரும் கர்நாடகவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2020ல் நடந்த குற்ற வழக்கு ஒன்றில், சுமார் நான்கு வருடங்களாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் இரு குற்றவாளிகளே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இருவரும் கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும், கர்நாடகாவில் இருந்து தப்பி கேரளாவுக்கும் அங்கிருந்து தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதாக கூறும் போலீசார், பின்னர் சென்னை வழியாக ஆந்திராவின் நெல்லூருக்கு சென்றிருப்பதாக கூறி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்