பல வண்டிகளை திருடிய பலே கில்லாடி... தள்ளி செல்லும் போது அள்ளி சென்ற போலீஸ்... கேரளாவில் பரபரப்பு

x

கொல்லம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நடந்த வந்த அனந்தகிருஷ்ணன் மற்றும் ரோனி ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால், பெட்ரோல் வாங்கச் செல்வதாகவும், வாகனம் மருத்துவமனை அருகே இருப்பதாகவும் கூறியுள்ளனர். பின்னர், அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று போலீசார் வாகனத்தை பார்த்தபோது, அதில் பெட்ரோல் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் சோதனை நடத்தியதில் ஏராளமான சாவிகள் இருந்ததால், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. விசாரணையில் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியது உறுதியானதை அடுத்து, அவர்களிடம் இருந்து 23 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்