கடும் குளிர்.. நடுங்கும் உடல்... அயோத்தியில் குவியும் பக்தர்கள் - எவ்வளவு பேர் தெரியுமா?

x

அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ராமரை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று கோயில் திறக்கப்பட்டதையடுத்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையில் கோயில் வளாகத்திற்கு வெளியே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு அவசரப்பட தேவையில்லை என்றும், தங்கள் நேரத்தை அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 2 வாரங்களுக்குப்பின் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்