சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. வெளியான முக்கிய தகவல்

x

சபரிமலை ஐய்யப்பன் கோவிலிற்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நிலக்கல் வாகன நிறுத்துமிடத்தில் FASTag மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நிலக்கலில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலக்கல் பார்க்கிங் மையம் ஃபாஸ்டேக் உடன் இணைக்கப்படவுள்ளது. FASTag மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு ஐசிஐசிஐ வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நவம்பர் 10ம் தேதி நிலக்கல்லில் டோல்கேட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான நேரமும், நீண்ட வரிசையால் ஏற்படும் சிரமங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்