மேலே துள்ளி ஓடி எலிகள் அட்ராசிட்டி..! பீதியில் நோயாளிகள்... அதிர வைக்கும் உ.பி. மருத்துவமனை அவலம்

x

உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மற்றும் அலிகாரில் உள்ள மல்கான் சிங் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், எலிகள் உலாவுவது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், படுத்திருக்கும் நோயாளிகள் மீதும் எலிகள் ஏறி ஓடுகின்றன. இதனால் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. எலிகள் நோயாளிகளை கடிக்கக்கூடும் எனவும், அவர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும் எனவும், அச்சம் எழுந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைகளிலில் எலித் தொல்லையை ஒழிக்க வேண்டுமெனவும், கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்