ஏடிஎம்-க்கு வெளியே பணப்பெட்டிகள்...ஷாக்கான போலீஸ் - மர்ம நபர் செய்த செயல்

x

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஏடிஎம் இயந்திரத்திற்கு உள்ளே இருக்க வேண்டிய பண பெட்டிகள் வெளியே கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு நகரின் மீனரவா சர்கிள் பகுதியில் வங்கி ஏடிஎம் இயங்கி வரும் நிலையில் அதன் அருகே ஏடிஎம் உள்ளே இருக்கும் பண பெட்டிகள் கிடந்துள்ளன. இது குறித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்துக்கு வெளியே மூன்று பெட்டிகளை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்