கோயிலுக்கு சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்..“அப்படி என்ன குற்றம் செய்தேன்?” - நடுரோட்டில் ராகுல் செய்த செயல் - பரபரப்பு

x

அசாம் மாநிலத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தான் என்ன குற்றம் செய்தேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு செய்ய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தான் என்ன குற்றம் செய்தேன் என்றும், தனக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பாதுகாவலர்களிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். யாரையும் தாங்கள் தொந்தரவு செய்யப் போவதில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதனிடையே, நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அசாம் அரசின் அழுத்தத்தால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்