18-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கெடு விதித்த ED | Arvind kejriwal

x

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை 4-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் கடந்த 3ம் தேதி கெஜ்ரிவால் ஆஜராக உத்தரவிட்டு, 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், தற்போது 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, வரும் 18ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு சட்டவிரோதமாக சம்மன் அனுப்பப்படுவதாக கெஜ்ரிவால் ஏற்கனவே கூறிய நிலையில், அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்